சிறுநீரகங்களை இயற்கையாக குணப்படுத்துவது எப்படி?

by | Oct 14, 2024 | Tamil - தமிழ்

எனது ஆழமான ஆராய்ச்சிக்குப் பிறகு, உணவு, வாழ்க்கை முறை மாற்றங்கள், ஊட்டச்சத்து மற்றும் இயற்கை மருந்துகள் (Natural Extracts)  மூலம் சிறுநீரகத்தை குணப்படுத்த ஒரு நெறிமுறையை நான் உருவாக்கி உள்ளேன். இந்த முறை மூலம்ன்,  டயாலிசிஸின் விளிம்பில் உள்ள பல சிறுநீரகச் செயலிழப்பு நோயாளிகளை, இயல்பான, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு  திரும்ப உதவியிருக்கிறேன்.

நான் ஊட்டச்சத்து நிபுணராக உள்ளேன் மற்றும் இந்தியாவில், தமிழ் நாட்டில், தஞ்சாவூர், அய்யம்பேட்டை அருகில் மாத்தூர் கிராமத்தில் சுலான் சோ இயறக்கை வாழ்வியல் மையம்  (Xulon Zoe Lifestyle Retreat Centre)  நடத்தி வருகிறேன். இயற்கையின் அமைதியால் சூழப்பட்ட கோடமூர்த்தி ஆற்றங்கரையில் எனது மையம் அமைந்துள்ளது. கோவிட்க்குப் பிறகு பல  சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்கு உள்நோயாளிகளாக சிகிச்சை அளித்து வருகிறேன். அவர்கள் எனது மையத்தில் 2 முதல் 6 வாரங்கள் தங்கி அவர்களின் உடல்நிலையைப் பொறுத்து சிகிச்சை பெற்று, பெரும்பாலோர் வாரத்திற்கு யூரியா (10 – 30) மற்றும் கிரியேட்டினின் (0.5 to 2.0) அளவு குறைகிறது, மற்றும் ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது. 

இந்திய மக்கள்தொகையில் ஏறத்தாழ 10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுகின்றனர். நீங்கள் அல்லது உங்கள் அன்புக்குரியவர்கள் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டு, சிறுநீரகங்களை இயற்கை முறையில் குணப்படுத்துவது மற்றும்  டயாலிசிஸை தவிர்க்கும் முறையை தேடிக்கொண்டிருக்கின்றிர்கள்  என்றால்: சிறுநீரக செயலிழப்பு வருவதற்கான காரணகங்கள்,   கொஞ்சம் கொஞ்சமாக எவ்வாறு செயலிழக்கிறது, பல்வேறு கட்டங்களையும், அதை எவ்வாறு தவிர்ப்பது மற்றும் சமாளிப்பது, சிறுநீரக செயல்பாடு குறைவதை நிறுத்துவது எப்படி, சிறுநீரக செயல்பாட்டை அதிகரிப்பது  எப்படி, சிறுநீரகத்தில் இரத்தத்தை வடிகட்டும்  நெஃப்ரான்களை   குணப்படுத்துவது, எந்த நிலையில் டயாலிசிஸ் செய்ய வேண்டும், புரத கசிவை குணப்படுத்துவது, ஹீமோகுளோபின் ஏன் தொடர்ந்து குறைகிறது, போன்ற பல விஷயங்களைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை உதவும். மேலும், பலவிதமான இயற்கை வைத்தியங்களை  பலர் முயற்சித்தாலும், ஏன் டயாலிசிஸ் நிலையில் முடிவடைகிறார்கள், ஆனால் உங்களுக்கு அப்படி ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்   என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். 

எனது நோயாளிகளில் ஒருவரான திரு. ஜெயபிரகாஷின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், அவர் சுமார் ஐந்து டயாலிசிஸ் செய்திருந்தார். இருந்தபோதிலும், அவரது சிறுநீர் வெளியீடு நாளொன்றுக்கு தோராயமாக 1.5 லிட்டர்க்கும்  அதிகமாக இருந்தது. எங்களின் சிகிச்சையின் மூலம், அவரது கிரியேட்டினின் அளவை நான்கு வாரத்தில் 7ல் இருந்து 3 ஆகக் குறைக்க முடிந்தது. இவரது சிறுநீர் வெளியீடு இன்றுவரை  2 லிட்டருக்கு மேலாக   உள்ளது. இவர் பரிந்துரைக்கப்பட்ட உணவுமுறை மற்றும் இயற்கை மருத்துவ முறைகளை தொடர்ந்து பின்பற்றி வருகிறார், மேலும் இவர் இன்றுவரை ஆரோக்கியமாக இருக்கிறார். நான்காண்டுகளுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட இவரது சமீபத்திய வீடியோவை கீழே பார்க்கலாம். 

இந்த கட்டுரையின் கடைசியில் எங்களிடத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த பலரின் அனுபவ வீடியோக்களை நீங்கள் காணலாம்.

சிறுநீரகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன: 

 

உங்கள் ஒவ்வொரு சிறுநீரகமும் நெஃப்ரான்கள் எனப்படும் சுமார் ஒரு மில்லியன் (10 லட்சம்) வடிகட்டுதகளைக் கொண்டுள்ளது, அவை மென்மையான, மிக சிறிய இரத்த குழாய்களில் ஆனவை. ஒவ்வொரு நெஃப்ரானிலும் இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன: குளோமருலஸ் மற்றும் குழாய். வடிகட்டுதல் இரண்டு படிகளில் நிகழ்கிறது: முதலில், குளோமருலஸ் இரத்தத்தை வடிகட்டுகிறது, பின்னர் குழாய் கழிவுப்பொருட்களை அகற்றும் போது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை மீண்டும் உறிஞ்சுகிறது. 

நாள்பட்ட சிறுநீரக நோயை குணப்படுத்த முடியாது என்று நவீன மருத்துவம் கூறுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந் கொண்டே இருக்கும் என்று நம்ப படுகிறது.  ஏனெனில், சிறுநீரக செயலிழப்பு நோயாளி கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து நெஃப்ரான்களை (வடிகட்டிகள்) இழக்கிறார். எனது நெறிமுறை சேதமடைந்த நெஃப்ரான்களை குணப்படுத்துவதன் மூலம் நெஃப்ரான்களை மீட்டெடுக்கிறது மற்றும் நெஃப்ரான்களுக்கு மேலும் சேதத்தை நிறுத்துகிறது. எனவே ஒருவர் சிறுநீரக செயல்பாட்டை 20% முதல் 40% வரை குணமாக்கி ஆரோக்கியமான இயல்பான வாழ்க்கையை வாழலாம்.

Duke-NUS மற்றும் NHCS விஞ்ஞானிகள் நோயுற்ற சிறுநீரகத்தை வெற்றிகரமாக  முதல் முறையாக புதுப்பித்தல் செய்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட நோயெதிர்ப்பு-ஒழுங்குபடுத்தும் புரதத்தைத் தடுப்பது குறுகிய மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோயால் ஏற்படும் சேதத்தை குணப்படுத்த முடியும் என்று இவர்களின் முன் மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது. கீழே உள்ள விடியோவை பார்த்தாலே உங்களுக்கு புரியும்.

இதேபோல், நெஃப்ரான்களை இயற்கையாகவே குணப்படுத்தும் நெறிமுறையை உருவாக்கியுள்ளேன். இந்த நெறிமுறை யூரியா போன்ற நச்சுகளை நீக்குவதன் மூலம் மற்றும் IL-11 சுரப்பைத் தடுக்கிறது மூலம், மேலும் பல்வேறு ஊட்டச்சத்து மருந்துகளைப் பயன்படுத்தி நெஃப்ரான்களை குணப்படுத்துவதை ஊக்குவிக்கிறது. இது நெஃப்ரான்களை வேகமாக குணப்படுத்துகிறது.

சிறுநீரகத்தை குணப்படுத்த இயற்கை மருத்துவத்துடன் நவீன மருத்துவத்தையும் இணைத்து ஒருங்கிணைந்த மருத்துவத்தை எங்கள் மையத்தில் பின்பற்றுகின்றோம். இயற்கை மருத்துவத்தில், இரத்தத்தில் உள்ள நச்சுகளை உறிஞ்சுவதற்கு நச்சு நீக்கி மருந்துகளைப் பயன்படுத்துகிறோம், பின்னர் அவை மலத்தின் மூலம் வெளியேற்றப்படுகின்றன, ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் இயற்கை மருந்துகள் (Natural Extracts) ஆகியவை மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்ட தழும்பான நெஃப்ரான்களைக் குணப்படுத்தவும் மேலும் தழும்புகள்  உருவாகுவதை தடுக்கவும் உதவுகிறது. சிறுநீரதிற்கு ஏற்ற தாவர அடிப்படையிலான உணவு முறை  இந்த சிகிச்சை முறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

ஆரம்பத்தில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற நிலைமைகளை நிர்வகிக்க, நோயாளியின் நவீன மருத்துவரின் பரிந்துரைத்த மருந்துகளைதொடர்ந்து எடுத்துக்கொள்ள அறிவுறுத்துகிறோம். நமது உணவுமுறை மற்றும் இயற்கை மருந்துகளால் நோயாளியின் உடல்நிலை மேம்படுவதால், மருத்துவரின் மேற்பார்வையில் நவீன மருத்துவ மருந்துகள் படிப்படியாகக் குறைக்கப்படுகின்றன.

முதல் நாளில், தைரோகேர் போன்ற NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்கள் மூலம் இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்கிறோம். 7 நாட்களுக்குப் பிறகு, நாங்கள் பரிசோதனைகளை மீண்டும் செய்கிறோம். பெரும்பாலோர் வாரத்திற்கு யூரியா (10 – 30) மற்றும் கிரியேட்டினின் (0.5 to 2.0)  அளவு குறைகிறது, மற்றும் ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது.  

இரத்த பரிசோதனையில், சோடியம், பொட்டாசியம், பைகார்பனேட் மற்றும் பாஸ்பரஸ் அளவுகளையும் சரிபார்க்கிறோம். இந்த மதிப்புகளின் அடிப்படையில், நாங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சிகிச்சை திட்டத்தை வழங்குகிறோம். உதாரணமாக, பாஸ்பரஸ் அளவு அதிகமாக இருந்தால், அது எலும்புகளில் இருந்து கால்சியம் இழப்புக்கு வழிவகுக்கும் மற்றும் கடுமையான அரிப்புகளை ஏற்படுத்தும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பாஸ்பரஸ் அளவைக் குறைக்க ஆலோசக நவீன மருத்துவர்  மற்றும் இயற்கை மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மற்றும் உணவு மூலம் சரி செய்யப்படும். இதை போல மற்ற ஏற்றத்தாழ்வுகளுக்கும் இதே அணுகுமுறையை நாங்கள் மேற்கொள்கிறோம்.

 அவர்களின் எடையை தினமும்கண்காணிக்கிறோம்.  இரத்த அழுத்தம் மற்றும் குளுக்கோஸ் அளவை  தினம்தோறும் கண்காணிக்கிறோம், குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு. சில நோயாளிகளுக்கு, அவர்களின் 24 மணி நேர சிறுநீர் வெளியீட்டை அளந்து அதன் அடிப்படையில் அவர்களின் திரவ உட்கொள்ளலை சரிசெய்கிறோம்.

குடிப்பதைவிட அதிகமாக  சிறுநீர் வெளியேறினாலும் எடை அதிகரித்தால், அதற்கு காரணம்  அல்புமின் புரதம்  குறைபாடு. இதை உணவு மற்றும் ஊட்டச்சத்து மூலம் சரி செய்யப்பட வேண்டும். ஆனால், குறைந்த சிறுநீர் வெளியீடுடன் எடை அதிகரிப்பு ஏற்பட்டால், அது திரவம் உடலில் தேக்கத்தால்  ஏற்படுகிறது. பொதுவாக, எங்கள் சிகிச்சை முறையில் சில நாட்களுக்குள் சிறுநீரில் அல்புமின் புரதக் கசிவு  குறைந்து, சிறுநீர் வெளியீடு  அதிகரிக்கிறது மற்றும் உடல் வீக்கங்கள் குறைகிறது. 

சில நோயாளிகளிடமும் நான் தோல்வியை சந்தித்திருக்கிறேன். ஒரு சிலர் சிறுநீரக செயலிழப்பின் மிக கடைசி நிலைகளில் குறைந்த சிறுநீர் வெளியேற்றத்துடன் வந்தனர், மற்றவர்கள் காலப்போக்கில் பரிந்துரைக்கப்பட்ட உணவு மற்றும் சிகிச்சை முறையை கடைபிடிக்கவில்லை. 

நான் எதிர்கொண்ட ஒரு கடினமான பிரச்சனை என்னவென்றால், எனது மையத்தை விட்டு வெளியேறிய பிறகு, நோயாளிகளை வீட்டிலேயே உணவு மற்றும் சிகிச்சை முறையை எளிதாக பின்பற்ற வைப்பது. இது இப்போது தீர்க்கப்பட்டது.

சிறுநீரக செயலிழப்பை குணப்படுத்துவதில் வெளியிடப்பட்ட பல்வேறு நிரூபிக்கப்பட்ட மருத்துவ ஆய்வுக் கட்டுரைகள்,  மற்றும் எனது மையத்தை விட்டு வெளியேறிய பிறகு சிகிச்சை  மற்றும் உணவுமுறையைப் பின்பற்றுவதில் நோயாளியின் நடைமுறைச் சிக்கல்கள் பற்றிய எங்கள் ஆராய்ச்சியின் மூலம் தற்போது சிகிச்சையை எளிதாக்கியுள்ளோம்.

தற்போது, நான் உணவு மற்றும் சிகிச்சை முறையை மேன்படுத்தி உள்ளேன். நோயாளிகள் இனி ஆரோக்கியமற்ற உணவுக்காக ஏக்கத்தில் விழுவது கிடையாது, மேலும் நெறிமுறையைப் பின்பற்றுவது இப்போது மிகவும் எளிதானது. 

கிரியேட்டினின் மற்றும் யூரியா, முன்பை விட வேகமாக குறைகிறது. சிறுநீரக செயலிழப்பை குணப்படுத்தும் புதிய இயற்கை மருத்துவ நெறிமுறையானது, கிரியேட்டினின் அளவை ஒவ்வொரு ஏழு நாட்களுக்கும் அதன் முந்தைய நிலைகளிலிருந்து 0.5 முதல் 2.0 வரை குறைக்கலாம். இது   இனி மேலும் குறைக்க முடியாத நிலையை அடையும் வரை  குறைக்கலாம். இது  சிறுநீரகங்கள்  எத்தனை சதவீதம் சுருங்கி உள்ளது என்பதை பொறுத்தது.

இந்த முறை கிரியேட்டினின் மற்றும் யூரியா அளவைக் குறைப்பது மட்டுமல்லாமல், அவை மேலும் உயராமல் தடுக்கிறது. 

எவ்வளவு சீக்கிரம் ஒருவர் சரியான சிகிச்சியை ஆரம்பிக்கிறாரோ, அதிகமாக கிரியாட்டினை குறைக்க முடியும், சிறுநீரகத்தின் செயல் திறனை அதிகப்படுத்தலாம்.   இந்த கட்டுரையில் மேலும் படிப்பதன் மூலம் இதைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

சிறுநீரக செயலிழப்பை குணப்படுத்துவது சாத்தியமில்லை என்று நவீன விஞ்ஞானம் ஏன் கூறுகிறது?

பெரியவர்களின் சிறுநீரகம்  புதிய நெஃப்ரான்களை உற்பத்தி செய்ய முடியாது என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுவதால், ஒரு நெஃப்ரான் அழிந்துவிட்டால், புதிய நெஃப்ரான் உருவாகாது  என்பது உண்மைதான்.  “ஒரு நபர் நெஃப்ரான்களின் இழப்பை சுமார் 90% இழக்கும் வரை ஈடுசெய்ய முடியும்” என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அதாவது தனிநபர்கள் தங்கள் நெஃப்ரான்களில் 90% வரை அழித்துவிட்டாலும்  சராசரி  வாழ்க்கை வாழ முடியும். எனது நெறிமுறையின் மூலம், ஒருவர்  சேதமடைந்த நெஃப்ரான்களில் 20% முதல் 40% வரை குணப்படுத்த முடியும், மேலும் அவர்கள் மிகவும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும், மேலும் நெஃப்ரான்களின் இழப்பைத் தடுக்கவும் முடியும். சேதமடைந்த நெஃப்ரான்களை குணப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.

சிறுநீரக செயலிழப்புக்கு என்ன காரணம்?

நாள்பட்ட சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை முக்கிய காரணங்களாகும். சிறுநீரக செயலிழப்பு என்பது சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், தன்னுடல் தாக்க நோய்கள், கீல்வாதம், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், அதிக புரதம் மற்றும் அதிக கொழுப்பு உணவு முறை,  மற்றும் நீண்டகால தவறான வலிநிவாரணிகள் அல்லது ஆன்டி-பயாடிக் மருந்துகளின் பயன்பாடு போன்றவற்றால் நெஃப்ரான்களுக்கு ஏற்படும் நீண்டகால சேதத்தின் விளைவாகும்.

குறுகிய சிறுநீரக நோயில், சேதமடைந்த நெஃப்ரான்கள் சில நாட்களில் இயற்கையாகவே குணமாகும். ஆனால், நாள்பட்ட சிறுநீரக நோயில், நெஃப்ரான் திசுக்கள் தொடர்ந்து காயமடையும் நிலையில், உடல் வெள்ளை இரத்த அணுக்களிலிருந்து இன்டர்லூகின் 11 (IL-11) எனப்படும் சைட்டோகைனை வெளியிடுவதன் மூலம் ஃபைப்ரோஸிஸ் (தழும்பு உருவாகுதல்) எனப்படும் செயல்முறையைத் தூண்டுகிறது. இந்த தொடர்ச்சியான படிப்படியாக நெஃப்ரான்களின் இழப்புக்கு வழிவகுக்கிறது மற்றும் காலப்போக்கில், சிறுநீரகங்களை சுருங்கச் செய்கிறது.

மூல காரணத்திற்கும் சிகிச்சையளிக்க வேண்டும்

நாள்பட்ட சிறுநீரக நோய் (சி.கே.டி) என்பது இரண்டாம் நிலை நோய், அதாவது சிறுநீரக நோய்க்கு சிகிச்சையளிப்பதுடன் மூல நொய்யிற்கும்  சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையெனில், இது மூழ்கும் படகில் ஓட்டையை  அடைக்காமல், உள்ளே வரும்  தண்ணீரை வெளியேற்ற முயற்சிப்பது போன்றது.

நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான மூல காரணத்தை கண்டறிவது சரியான சிகிச்சைக்கு அவசியம். இது மூல நோய்க்கு  இயற்கை   சிகிச்சை  மற்றும் நவீன மருந்துகளை படிப்படியாக குறைக்கவும் உதவும்.  

ஒருவருக்கு நீண்ட காலமாக உயர் இரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை நொய்  இருந்து, அந்த காலகட்டத்தில் அவர்களின் கிரியேட்டினின் அளவு சரியான அளவிற்குள் இறுதிருத்தால், உயர் இரத்த அழுத்தமே அல்லது சர்க்கரை நொய் மூல  காரணமாக இருக்கலாம் என்று கருதலாம். ஆனால், ஒரு நபருக்கு ஒரே நேரத்தில் நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டால், சிறுநீரக நோய், உயர் இரத்த அழுத்தம் அல்லது  தன்னுடல் தாக்கக் நோய்கள்  அல்லது வேறு காரணிகளால் ஏற்படுகிறதா என்பதை ஒரு பயாப்ஸி (சிறுநீரக திசு சோதனை) ஆய்வு மூலம்   தீர்மானிக்கப்பட வேண்டும். சிறுநீரகங்கள் மிகவும் சுருங்கி இருந்தால், பயாப்ஸி செய்ய முடியாது. எனவே உங்கள் மருத்துவர் பயாப்ஸியை பரிந்துரைத்தால், மூல காரணத்தைக் கண்டறிய பயாப்ஸி சோதனை  செய்ய வேண்டும். 

நிரூபிக்கப்பட்ட இயற்கை மருத்துவம் மற்றும் உணவு முறை மூலம் மூல  நோயையும், சிறுநீரகத்தையும் படிப்படியாக  குணப்படும் போது, மருத்துவரின் மேற்பார்வையில் நவீன மருந்துகள் படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும்.

சர்க்கரை நோய் எவ்வாறு சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துகிறது:

சர்க்கரை நோய் நம் உடலை எவ்வாறு பாதிக்கிறது என்பது பலருக்குத் தெரியாது. அதிகப்படியான குளுக்கோஸ், எண்டோடெலியம் எனப்படும் இரத்த குழாய்களின்  உட்புறத்தை எரிச்சலூட்டுகிறது மற்றும் சேதப்படுத்துகிறது, இதனால் உடல் முழுவதும் பெரிய மற்றும் சிறிய இரத்த குழாய்களில், கொலஸ்ட்ரால் படிந்து   ஆர்டெரியோஸ்கிளிரோசிஸ் எனப்படும் இரத்த குழாய்களில் ஏற்படும் கொலஸ்ட்ரால் அடைப்பை உடலில் உள்ள இரத்த குழாய்களில்  ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, சர்க்கரை நோய் உடலின்  ஒவ்வொரு உறுப்புகளை நாளைடைவில்  சீரழிகிறது. சிறுநீரகம்  இரத்த குழாய்களால்  நிறைந்த உறுப்பு. சர்க்கரை  நோய் சிறுநீரகத்தில் உள்ள பெரிய மற்றும் சிறிய இரத்த குழாய்களையும்,  லட்சக்கணக்கான மென்மையான நெஃப்ரான்களையும்  சேதப்படுத்துகிறது.  இதனால் தான்  சர்கரை நோய் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துகிறது. 

உயர் இரத்த அழுத்தம் எவ்வாறு சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துகிறது:

உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள மென்மையான நெஃப்ரான்களை சேதப்படுத்துகிறது. காலப்போக்கில், இந்த நாள்பட்ட சேதம் ஃபைப்ரோஸிஸ்ஐ  (தழும்பு உருவாகுதல்) தூண்டுகிறது, இது படிப்படியாக நெஃப்ரான்களின் இழப்புக்கு வழிவகுக்கிறது. காரணம் உணவில்  அதிக: சுத்திகரிக்கப்பட்ட மாவு சத்து, விலங்கு புரதம் மற்றும் கொழுப்பு, மற்றும்  வாழ்க்கை முறை காரணிகள்.

பல பள்ளி மாணவர்களுக்கு மற்றும் இளைஞர்களுக்கு  உயர் இரத்த அழுத்தத்தின் விளைவாக சிறுநீரக செயலிழபு  வருகிறது. பெரும்பாலான அளவு  சிறுநீரக பாதிப்பு ஏற்பட்ட பின்னரே, தங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்துள்ளது, அதனால் சிறுநீரகம் பாதிப்படைந்துள்ளது என்பது தெரிய  வருகிறது. கரணம் ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறை.

பலர் சர்க்கரை நோய்   மற்றும் உயர் இரத்த அழுத்தம் மிகவும்  ஆபத்தானவை என்பதை  உணராமல் சாதாரணமாக எடுத்து கொள்கிறார்கள். இரண்டுமே அமைதியான உயிர் கொல்லி நோய்கள். இவைகள் வாழ்க்கை முறை தொடர்பான நோய்களாகும், சரியான உணவு, இயறக்கை மருத்துவம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம்  பலரை நாங்கள் குணப்படுத்தியுள்ளோம்.   

ஆட்டோ இம்யூன் ( Auto-immune தன்னுடல் தாக்கம்) நோய்களால் சிறுநீரக செயலிழப்பு

ஒரு ஆட்டோ இம்யூன் நோய் என்பது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு அதன் சொந்த ஆரோக்கியமான செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளை தவறாக தாக்கும் ஒரு நிலை. இது, உடலின் வெவ்வேறு பகுதிகளில் ஏற்படலாம் அல்லது குறிப்பிட்ட உடலுறுப்பில் மட்டும் ஏற்படலாம். இது நோயின் வகையைப் பொறுத்து உடலின் வெவ்வேறு பகுதிகளில் அல்லது குறிப்பிட்ட உடலுறுப்பில் வாதம் மற்றும் சேதத்தை ஏற்படுத்தும்.

லூபஸ்(Lupus), ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) மற்றும் membranous  நெஃப்ரோபதி போன்ற தன்னுடல் தாக்க நோய்களில், நோயெதிர்ப்பு துகள்கள் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டு குளோமருலஸில் சிக்கி, நெஃப்ரான்களுக்கு சேதத்தை ஏற்படுத்துகின்றன. 

நெஃப்ரான்கள் மேலும் சேதமடைவதைத் தடுக்கும் நோயெதிர்ப்பு துகள்களைக் கரைக்க சிறப்பு இயற்கை புரோட்டியோலிடிக் என்சைம் (Proteolytic Enzymes) மருந்துகளைப் பயன்படுத்துகிறோம். ஆட்டோ இம்யூன் குணமாவதற்கும் உதவும் மற்றும் நெஃப்ரான்களை சேதப்படுத்தும் நோயெதிர்ப்பு துகள்களைக் உற்பத்தியைத் தடுக்கும் அறிவியல்பூர்வமாக  நிரூபிக்கப்பட்ட இயற்கை மருந்துகளைப் (Natural Extracts) பயன்படுத்துகிறோம்.

பெரும்பாலான சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளின் இரத்த அழுத்தம் ஏன் மிக  அதிகமாக உள்ளது?

நெஃப்ரான்கள் சேதமடையும் போது, ​​அவை அதிக ரெனின்-ஆஞ்சியோடென்சின்-ஆல்டோஸ்டிரோன் (renin-angiotensin-aldosterone hormones) ஹார்மோன்களை வெளியிடுகின்றன, இதனால் உயர் இரத்த அழுத்தம் மிகவும் அதிகரிக்கிறது.  இதை முறையான நவீன மருத்துவம் மூலம் கட்டுப்படுத்தலாம். எங்கள் சிகிச்சையின் மூலம், நெஃப்ரான்கள் குணமடையத் தொடங்கி, சில வாரங்களில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறையும். இதன் விளைவாக, எங்கள் மையத்தில் மருத்துவரின் வழிகாட்டுதலின் கீழ் இரத்த அழுத்த மருந்துகள் படிப்படியாக குறைக்கப்படுகின்றன. 

புரதக் கசிவு

ஒருவர் சிறுநீரில் தொடர்ந்து அதிகமாக நுரை  வருபதைக் கவனித்தால், சிறுநீரில்  புரதக் கசிவைக் ஏற்படுகிறது என்பதை உணர வேண்டும். இது  சிறுநீரக செயலிழப்புக்கான ஆரம்ப அறிகுறியாகும். இதை எங்களது சிகிட்சையில் புரதக் கசிவை குணப்படுத்த முடியும். ஆனால், நவீன மருத்துவம் இதை குணப்படுத்த முடியாது என்று கருதுகிறது.   

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், எங்களின் சிகிச்சையின் சில வாரங்களுக்குள் புரதக் கசிவு நின்றுவிடும் அல்லது மிகவும் குறைவதை நாங்கள் கவனித்திருக்கிறோம். நெஃப்ரான்கள் குணமடையகிறது என்பதற்கு இது ஒரு சரியான அறிகுறியாகும்.

சிறுநீரில் முதன்மையாக இழக்கப்படும் புரதம் அல்புமின் ஆகும், இது திசுகளுக்குள்  நீர் செல்வதை தடுக்க உதவுகிறது. அல்புமின் அளவு உடலில்  குறையும் போது, ​​நோயாளிகள் கால்கள், தொடைகள், வயிற்று குழி மற்றும் முகத்தில் வீக்கத்தை பார்க்கலாம். சிறுநீரக செயலிழப்பு மேலும் அதிகமாகும் போது, ​​பாதிக்கப்பட்டவர்களுக்கு  கொஞ்சம் கொஞ்சமாக மூச்சுத்திணறல் வரும், குறிப்பாக நடக்கும்போது.  ​​மேலும் நுரையீரலில் நீர் தேக்கம், அதிகரிக்கும் போது, படுக்கவும் தூங்கவும் கூட முடியாத நிலை ஏற்படும். இந்தச் சிக்கல்களை மருத்துவர் பரிந்துரைக்கும்  சிறுநீர்  வெளியேற்றும் மருந்துகள் அல்லது சோள நூல்   டீ, மூக்கிரட்டை,  பூனை மீசை  போன்ற கஷாயம் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு  சமாளிக்கலாம்.

கிரியேட்டினின் அளவு 3க்குக் கீழே உள்ள சில நோயாளிகளில் கால் மற்றும் முகத்தில் வீக்கத்தை நான் கவனித்திருக்கிறேன், அதே சமயம் கிரியேட்டினின் அளவு 8க்கும் மேல் உள்ளவர்களுக்கு   இதே போன்ற அறிகுறிகளைக் காணப்படவில்லை.இதற்கு காரணம் நீண்ட நாட்களாக  தினசரி அல்புமின் புரத கசிவு அளவு மற்றும்  உடலில் உள்ள அல்புமின் அளவை பொறுத்தது. 

அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட நச்சுத்தன்மையற்ற இயற்கை மற்றும் ஊட்டச்சத்து மருந்துகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். சில மருந்துகள் சில நோயாளிகளுக்கு வேலை செய்யும், சில நோயாளிகளுக்கு வேலை செய்யாது. ஏன் என்று கண்டுபிடித்தோம். அதற்குக் காரணம் அவர்களுக்கு இருக்கும் பல்வேறு பிரச்சனைகள். சிலருக்கு சர்க்கரை நோய், சிலருக்கு உயர் ரத்த அழுத்தத்துடன் சர்க்கரை நோய், சிலருக்கு உயர் ரத்த அழுத்தம், சிலருக்கு யுடிஐ தொற்று, சிலருக்கு கீல்வாதம், சிலருக்கு பாரா தைராய்டு, சிலருக்கு லூபஸ், IgA நெப்ரோபதி போன்ற பல்வேறு ஆட்டோ இம்யூன் நோய்கள் இருக்கும். சிறுநீர் வெளியீடு அளவு, கிரியேட்டினின், யூரியா, ஹீமோகுளோபின், யூரிக் அமிலம், அல்புமின் போன்ற சிறுநீரகச் செயல்பாடு நிலை அளவையும் சார்ந்துள்ளது. எனவே அவர்களின் உணவு மற்றும் மருந்து சிகிச்சை மாறுபடும். நோயாளியின் நிலையைப் பொறுத்து 7 நாட்களில் கிரியேட்டினின் 0.5 முதல் 2.0 வரை குறைக்க அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட இயற்கை மருத்துவ நெறிமுறையை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த கட்டுரையில், சிறுநீரக செயலிழப்பு பற்றிய ஆழமான தகவல்களை எளிய வார்த்தைகளில் புரிந்து கொள்ள நான் உங்களுக்கு உதவுகிறேன், இதன் மூலம் நீங்கள் அல்லது உங்கள் அன்புக்குரியவர்கள்  டயாலிசிஸ் இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.

ஹீமோகுளோபின் ஏன் தொடர்ந்து குறைகிறது?

சிவப்பு இரத்த அணுக்களை (RBCs) உருவாக்க எலும்பு மஜ்ஜையை  தூண்டும் எரித்ரோபொய்டின் என்ற ஹார்மோனை சுரப்பதில்  நெஹ்ரான்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.  நெஹ்ரான்களின் செயல்பாடு குறைவதால், எரித்ரோபொய்டின் சுரத்தல் குறைகிறது, இது குறைவான புதிய சிவப்பு இரத்த அணுக்கள் உருவாக வழிவகுக்கிறது. இரத்த சிவப்பணுக்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 120 நாட்கள் என்பதால், இரத்த சிவப்பணு உற்பத்தியில் நிலையான சரிவு ஹீமோகுளோபின் அளவுகளில் படிப்படியாக வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

இதற்கு  நவீன மருத்துவர்கள்  நோயாளியின் நிலையைப் பொறுத்து, எரித்ரோபொய்டின் ஊசிகளை பரிந்துரைக்கிறார்கள். இந்த ஊசி மருந்து ஒவ்வொன்றும் 1,500 முதல் 3,500 ரூபாய் வரை செலவாகும். ஹீமோகுளோபின் 9க்குக் கீழே குறையும் போது வாரத்திற்கு ஒரு முறை  ஊசி போடுவதைத் தொடங்குவது பொதுவாக அறிவுறுத்தப்படுகிறது. பல டயாலிசிஸ் நோயாளிகள் வாரந்தோறும் ஒரு முறை அல்லது இருமுறை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இந்த விஷியத்தில் மருத்துவர் அல்சோனை படி நடப்பது நல்லது. 

எனது அனுபவத்தில், சில நோயாளிகளுக்கு எனது நெறிமுறையைப் பின்பற்றுவதன் மூலம், எரித்ரோபொய்டின் ஊசி தேவையில்லாமல், 9 முதல் 10 வரை ஹீமோகுளோபின் அதிகரித்து சில வாரங்களுக்குள் 11 ஆக அதிகரித்துள்ளது.

உப்பு இல்லாத உணவின் ஆபத்து

உப்பை முழுவதுமாக தவிர்ப்பது சிறுநீரக செயலிழப்பைக் குணப்படுத்த உதவும் என்று சிலர் நம்புகிறார்கள், ஆனால் இது ஒரு தவறான கருத்து. உப்பு மூலம் சோடியம் மற்றும் குளோரைடை கிடைக்கிறது, இவை இரண்டும் சரியான உடல் செயல்பாட்டிற்கு தேவையான எலக்ட்ரோலைட்டுகள் (நீர் சத்துக்கள்). முற்றிலும் உப்பு இல்லாத உணவு, ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்குள் குறைந்த சோடியம் நிலைக்கு வழிவகுக்கும், இது கீழ் உள்ள பல அறிகுறிகளை ஏற்படுத்தும்:

  • குழப்பம்
  • எரிச்சல்
  • அமைதியின்மை
  • வலிப்பு
  • சோர்வு
  • தலைவலி
  • பசியின்மை
  • தசை பலவீனம், பிடிப்புகள் அல்லது பிடிப்புகள்
  • குமட்டல், வாந்தி
  • நிற்கும் போது தலைசுற்றல் 
  • கோமா

எனவே, உப்பு இல்லாத உணவு முறை ஆபத்தானது மற்றும் தவிர்க்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக, உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உப்பு உட்கொள்ளலைக் குறைப்பதில் கவனம் செலுத்துங்கள், ஆனால் அதை முழுவதுமாக தவிர்க்க வேண்டாம்.

டயாலிசிஸ் எப்போது அவசியம்?

யூரியா போன்ற யுரேமிக் நச்சுகள் இரத்தத்தில் மிகவும் அதிகமாகும் போது   டயாலிசிஸ் இன்றியமையாததாகிறது, இந்நிலையில் ஒன்றுமே  சாப்பிட முடியாமல் மற்றும் புளிப்பு, மஞ்சள் நிற பித்தத்தை வாந்தி வரும். சிலருக்கு நுரையீரல்களில் அதிக நீர் சென்று கடுமையான மூச்சுத்திணறல் திணறல்  வரும். இவ்விரண்டில் இந்த நிலைமை வந்தாலும், இயல்பு நிலைக்கு வர  டயாலிசிஸ் மட்டுமே தீர்வு. யூரியா 120க்கு மேல் இருந்தாலோ அல்லது நீண்ட நாட்களாக வீக்கம் இருந்தாலோ இந்த நிலைமைகள் எவருக்கும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம்.  யூரியா 120க்கு மேல் இருந்தாலோ அல்லது நீண்ட நாட்களாக வீக்கம் இருந்தாலோ இந்த நிலைமைகள் எவருக்கும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இந்த நிலையில் டயாலிசிஸிலிருந்து காப்பாற்ற பலர் என்னிடம் வருகிறார்கள். ஆனால்  டூ லேட்.